உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-06-10 14:58 IST   |   Update On 2023-06-10 14:58:00 IST
  • கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
  • உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராம் மரக்கன்றுகளை நட்டார். உடன் பரமக்குடி உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன், பரமக்குடி உதவிப்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News