உள்ளூர் செய்திகள்

ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை

Published On 2023-06-08 08:41 GMT   |   Update On 2023-06-08 08:41 GMT
  • அபிராமத்தில் செயல்படும் ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
  • பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதியில் உணவகங்கள், குளிர்பானக் கடை, பழக்கடைகளில் கடந்த சில மாதங்களாக சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள், குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஓட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகளை வாங்கும் பொதுமக்கள் அவைகளை உட்கொண்டு உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாம்பழ சீசன் என்பதால் அபிராமம் பகுதியில் உள்ள சில பழக்கடைகளில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் பொது மக்களுக்கு வயிற்றுவலி, உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள உணவகம் டீக்கடை, குளிர்பா னக்கடை தண்ணீர் கேன், பழக்க டைகளில் கால வதியான தரம் குறைவான பொருட்கள் விற்கப்படு கிறது. எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News