உள்ளூர் செய்திகள்

மதநல்லிணக்க பூக்குழி திருவிழா

Published On 2022-08-11 13:56 IST   |   Update On 2022-08-11 13:56:00 IST
  • மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.
  • இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது. பெரியகுளம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அசனார், உசேனார், மாமூனச்சி ஆகிய உடன் பிறந்தவர்கள் இருந்தனர்.

அங்கு நடந்த கலவரத்தில் அசனார், உசேனார் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை எரித்த தீயில் சகோதரியான மாமுனாட்சி அதே நெருப்பில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பின்பு பெரியகுளம் பகுதியில் காலரா பரவி அதிக அளவில் பொதுமக்கள் இறந்தனர்.

அந்த கிராமத்தில் பெரியவர் ஒருவர் கனவில் தலையில் முக்காடு அணிந்த பெண் தோன்றி நோய் குணமாக வேண்டுமானால் வருடந்தோறும் பூக்குழி இறங்கி எங்களை வணங்கி வந்தால் நோய் குணமாகும் என்று கூறி மறைந்தார். அதன்படி பொதுமக்கள் நேர்த்திக்கடனாக செய்தனர்.

பரவிய நோய் காணாமல் போனது. அது முதல் பெரியகுளம் கிராம மக்கள் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை அன்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீக்கங்குகளை போட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர். விழாவில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News