உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பரமக்குடிக்கு செல்ல பஸ் கிடைக்காமல் தவித்த பயணிகள்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்கள் வழித்தடம் மாற்றம்

Published On 2022-10-29 07:28 GMT   |   Update On 2022-10-29 07:28 GMT
  • ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
  • இதனால் பரமக்குடி பயணிகள் வழக்கம் போல் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக பரமக்குடி வழியாக செல்லும் பஸ்களின் வழித்தடம் இன்று காலை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்கள், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைகாட்டி, சிவகங்கை வழித்தடங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. வழக்கமாக பரமக்குடி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று காலை முதல் திடீர் மாற்றம் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி செல்லும் பயணிகள் பஸ் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

அவர்கள் இது தொடர்பாக கண்டக்டர், டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பரமக்குடிக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News