உள்ளூர் செய்திகள்

மண்டபத்தை சேர்ந்த தில்லை ரேவதியிடம் மீட்கப்பட்ட பணத்திற்கான ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வழங்கினார்.

சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.3.11 கோடியை இழந்த பொதுமக்கள்

Published On 2022-12-22 07:52 GMT   |   Update On 2022-12-22 07:52 GMT
  • கடந்த 2 ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.3.11 கோடியை இழந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
  • பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைதீர்ப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க ள் உன்னிகிருஷ்ணன், பாஸ்கரன், ராமநாதபுரம் டி.எஸ்.பி, ஜெயச்சந்தின் மற்றும் உட்கோட்ட வாரியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த முகாமில் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த தில்லை ரேவதி ஆன்லைன் தகவலை நம்பி ரூ. 19 ஆயிரத்து 999-யை இழந்திருந்தார். அந்த பணத்தை போலீசார் மீட்டதற்கான சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தில்லை ரேவதியிடம் வழங்கினார்.

கடந்த அக்டோபர் முதல் இதுநாள் வரை போலீஸ் சூப்பிரண்டு குறைதீர்ப்பு முகாம், முதல்வரின் தனிப்பிரிவு மனு, டிஜிபி அலுவலக மனுக்கள் என 1415 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதில் 1259 மனுக்களுக்கு புகார்தாரர் க ளுக்கு திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள், திருப்தி இல்லை என விசாரணையில் உள்ளது. தற்போது 41 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்த1274 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

இதன்மூலம் பொது மக்கள் மொத்தம் ரூ.3.11 கோடி பணம் இழந்தனர். இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகளில் 73 லட்சத்து 10 ஆயிரத்து 347 ரூபாய் போலீசாரால் முடக்கப்பட்டது.

இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 660 ரூபாய் சம்பந்தப்பட்டவர் க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும் போது, பொதுமக்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது, பரிசு பொருட்கள் விழுந்திருப்ப தாக கூறுவது, ஆன்லைனில் முதலீடு செய்வது, பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News