உள்ளூர் செய்திகள்

பெரிய கோவில் ராஜ கோபுரத்தில் அடர்ந்து வளரும் செடிகள்

Published On 2023-11-22 05:48 GMT   |   Update On 2023-11-22 05:48 GMT
  • திருவாடானை பெரிய கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
  • அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாடானை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிநேகவள்ளி தாயார் -ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 தலங்களில் 8-வது தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலின் ராஜகோபுரம் 9 நிலைகளை கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கே ஆலமரம், அரசமரம். வேப்பமரம் போன்ற மரக்கன்றுகள் முளைத்திருப்பதால் கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் கீழே விழுந்து வருகின்றன. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News