உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் வழங்கினார்.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை-கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்

Published On 2023-09-23 08:25 GMT   |   Update On 2023-09-23 08:25 GMT
  • விருதுநகரில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.
  • வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் ஆனந்த் குமார் மாற்றுத்திறனாளிக் கான தேசிய அடையாள அட்டைகளை மாற்றுத்திற னுடைய குழந்தைகளுக்கு வழங்கினார்.

இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட 60 குழந்தை கள் கலந்து கொண்டனர். இதில் உதவி உபகரணங்கள் வேண்டி 7 மனுக்களும், இலவச பேருந்து அட்டை வேண்டி 20 மனுக்களும் பெறப்பட்டது. இதில் 18 குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகிற 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29-ந்தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தில் 3.10.2023-ந்தேதி எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலை ப்பள்ளியிலும், அருப்புக்கோ ட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5-ந்தேதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10-ந்தேதி எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13-ந்தேதி எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 19-ந்தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21-ந்தேதி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி யிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 26-ந்தேதி நகராட்சி ஏ.வி.டி.உயர்நிலைப்பள்ளியிலும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெற உள்ளது.

எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவ தற்கு தேவையான ஆவ ணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப் படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இம்முகாமில் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உட்பட பள்ளிக்கல்வித்துறை அலுவ லர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News