உள்ளூர் செய்திகள்

முளைகொட்டு உற்சவத்தில் ஒயிலாட்டம் ஆடிய இளைஞர்கள்.

முத்துமாரியம்மன் கோவில் முளைகொட்டு உற்சவம்

Published On 2023-10-05 08:59 GMT   |   Update On 2023-10-05 08:59 GMT
  • முத்துமாரியம்மன் கோவில் முளைகொட்டு உற்சவம் நடந்தது.
  • பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.

மண்டபம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நொச்சி ஊரணி கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.

தொடர்ந்து 100-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பலர் தங்களது நேர்த்திக்கடனை நிறை வேற்றினர். ஒயிலாட்டம், அன்னதானம் நடைபெற்றது.

இதில் நொச்சிஊரணி ஊராட்சி மன்ற தலைவர் சீனி அரசு, கிராம தலைவர் தங்கையா, செயலாளர் ரத்தினம், துணைச் செயலா ளர் இருளாண்டி, பொருளா ளர் அழகர் பெருமாள் உட்பட சுற்றுபுற கிராமங் களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News