உள்ளூர் செய்திகள்

மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2022-07-25 07:03 GMT   |   Update On 2022-07-25 07:03 GMT
  • மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
  • சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த தூய செங்கோல் அன்னை ஆலயம் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதிய கொடி மரம் புனிதப்படுத்துதலும் திரு விழா கொடியேற்றத்தையும் தமிழக ஆயர் பேரவை கென்னடி நிறைவேற்றினார்.

கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News