உள்ளூர் செய்திகள்

பொன்னையாபுரம் மனோகரன்

இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்: முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பு

Published On 2023-09-12 08:16 GMT   |   Update On 2023-09-12 08:16 GMT
  • தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபத்திற்கு அரசு அறிவிப்புக்கு முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பளித்தார்.
  • ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் நேற்று பர மக்குடியில் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பி.பி.எப்.டி. அமைப்பின் நிறுவன தலை வரும், முன்னாள் கவுன்சில ருமான பொன்னையாபுரம் மனோகரன் தனது ஆதரவா ளர்களுடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். அவ ருக்கு எங்கள் அமைப் பின் சார்பில் நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம்.இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல் இது நீண்ட போராட் டமாக இருந்தது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் எங்கள் அமைப்பின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.

நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் அண்டக்குடி முருகே சன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதக்காதி, மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி, தனுஷ் பிரபாகரன், மதி இளமாறன், ராமநாத பிரபு, சரோன் இளமாறன் உள்ளிட்ட பி.பி.எப்.டி. அமைப்பின் நிர் வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.

Tags:    

Similar News