உள்ளூர் செய்திகள்

தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை

Published On 2022-12-16 08:18 GMT   |   Update On 2022-12-16 08:18 GMT
  • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை நடந்தது.
  • மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-ந் தேதி நடந்தது.

இதையடுத்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. 48 -வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநா யகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

அக்டோபர் மாதம் நடந்த தேவர்குருபூஜையின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய வெள்ளி கவசத்தை அவரது மகன் ஜெயபிரதீப், அ.தி.மு.க. எம்.பி. ஆர்.தர்மர் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார். அப்போது அவருக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வினோதினி சீனிவாசகம் சார்பில் 2 அடி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்க ப்பட்ட தேவரின் வெள்ளி கவசத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News