உள்ளூர் செய்திகள்
வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம்
- வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29-ந் தேதி விக்னேசவர பூஜை, தன பூஜை உடன் தொடங்கி கணபதி ஹோமம் வாஸ்து சாந்திகள் நடைபெற்று, நேற்று முன்தினம் அதிகாலை பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை கடம் புறப்பாடாகி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கும்பாபிஷேகம், மகிஷாபிஷேகம் ஆகியவை நடந்தன.
இதில் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.