உள்ளூர் செய்திகள்

 பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-14 08:24 GMT   |   Update On 2023-05-14 08:24 GMT
  • பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தியது.
  • திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

பரமக்குடி

தமிழக முழுவதும் கடந்த 9-ந்தேதி முதல் நெடுஞ் சாலைத்துறை அலுவல கங்களில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பார்த்திபனூர் புறவழிச் சாலை சாலை மேம்பாட்டு பணிகளை மதுரை நெடுஞ் சாலை, திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சாலை அமைப்பதற்கான மண் நிரப்புதல் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான ஆய்வ றிக்கை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது திட்டங்கள் கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர் சாருமதி, உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், ராமநாதபுரம் கோட்ட பொறியாளர் சந்திரன், பரமக்குடி உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பிரபாகரன், நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் வெற்றிவேல் ராஜன், உதவி பொறியாளர்கள் அன்பரசு, சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News