- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் கண் மருத்துவ மனை இனைந்து கொழுந்துரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
கொழுந்துரை ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் வரவேற்று கண்சிகிச்சைக்கு வந்த அனைவருக்கும் இலவச உணவு வழங்கினார். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டன.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் முகாமை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இலவச கண்ணாடிகளை அணிவித்தார். முதுகு ளத்தூர் வட்டா வளர்ச்சி அலுவலர் ஜானகி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெய பால், மணலூர் ராமர், சத்தியேந்திரன், ரஞ்சித், கொழுந்துரை ஊராடசி மன்ற தலைவர் நஸ் ரீன்பானு, வாகைக் குளம் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.