உள்ளூர் செய்திகள்

எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு

Published On 2023-07-18 07:06 GMT   |   Update On 2023-07-18 07:06 GMT
  • கீழக்கரை மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
  • மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கீழக்கரை

கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்காத தால் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது.

கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து கடந்த 13-ந் தேதி மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற் போது எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டு உள்ளது.

இதனால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்டு சம்பந்த பட்ட அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்ற மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News