உள்ளூர் செய்திகள்

த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம்

Published On 2023-08-09 08:13 GMT   |   Update On 2023-08-09 08:13 GMT
  • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
  • கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மத்திய மாவட்டம் சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன பொதுக்கூட்டம் த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., பத்திரிகையாளர் செந்தில் வேல், திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் இனப்படு கொலை, இலங்கை அரசால் தமிழக மீனவர்க ளின் தொடர் கைது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News