உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில் உள்ள பிணவறை கட்டிடம்.

பழுதடைந்த நிலையில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறை

Published On 2023-03-15 09:52 GMT   |   Update On 2023-03-15 09:52 GMT
  • திருவாடானையில் அரசு மருத்துவமனை பிணவறை பழுதடைந்த நிலையில் உள்ளது.
  • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாடானை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாகும். இந்த தாலுகாவை சுற்றிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாலுகா அரசு பொது மருத்துவ மனையாக திருவாடானையில் உள்ள அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் எந்த அடிப்படை வசதியுமின்றி பழுதடைந்து ஜன்னல், கதவு உடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிணவறை கட்டிடம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக இங்கு தரையில் கிடத்தப்படும் அவலநிலை தான் உள்ளது.

குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News