உள்ளூர் செய்திகள்

உலக தாய்ப்பால் வார விழா

Published On 2022-08-06 08:25 GMT   |   Update On 2022-08-06 08:25 GMT
  • உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

சாயல்குடி

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பாயல் வார விழா நடைபெற்றது. கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் உலக தாய்ப்பால் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன், பிச்சை, செய்யதுராபியா, வாசுகி, வட்டார மேற்பார்வையாளர் பண்ணையரசி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி, வட்டார திட்ட உதவியாளர் வெள்ளை பாண்டியன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News