உள்ளூர் செய்திகள்

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-03-19 09:08 GMT   |   Update On 2023-03-19 09:08 GMT
  • பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
  • 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டார வள மையத்தில் ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் உள்ளடக்கிய கல்வியின் கீழ் பள்ளி ஆயத்த பயிற்சி மையம், தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழிக் கல்வி பயிலும் ஆதார வள மையங்களில் சேர்க்கை செய்யப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 50 மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News