உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி

Published On 2022-12-13 12:46 IST   |   Update On 2022-12-13 12:46:00 IST
  • ராமநாதபுரத்தில் சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையின் மூலம் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பாரி, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, சமூக நலத்துறை அலுவலர் தமயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மீனாட்சி சுந்தரேஸ்வரி, சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News