உள்ளூர் செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Published On 2022-11-21 07:07 GMT   |   Update On 2022-11-21 07:41 GMT
  • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
  • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News