உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-27 13:30 IST   |   Update On 2023-06-27 13:30:00 IST
  • கமுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • இந்த பேரணி நாடார்பஜார், பஸ் நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக, கோட்டைமேடு வரை நடைபெற்றது.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை வகித்தார். போலீசார் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி சந்தைப்பேட்டை பகுதியில் தொடங்கியது. இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், அபுதுல்லா, விமலா,கோமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், அருண்பாண்டியன், சத்தியநாராயணன், ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர். இந்த பேரணி நாடார்பஜார், பஸ் நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக, கோட்டைமேடு வரை நடைபெற்றது.

Similar News