உள்ளூர் செய்திகள்

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-08-09 07:17 GMT   |   Update On 2023-08-09 07:17 GMT
  • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • 27 வருடங்களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

பசும்பொன்

கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1996-97-ம் வருடம்

10-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 27 வருடங் களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று கூடிய இவர்கள் பெருநாழி யில் தாங்கள் படித்த பள்ளியில், கல்வி கற்றுத் தந்த ஆசிரிய, ஆசிரியை களை அழைத்து, அவர்கள் முன்னிலையில், தங்களது பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான், தற்போது, ஒழுக்க மாகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆசிரி யர்கள் முன்பு, பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஆசிரியர் களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் ஆசிரியர்கள் முன்பு, வரிசையாக நின்று, பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்தும் வகையில், கம்பால் அடி வாங்கி கொண்டனர்.

Tags:    

Similar News