உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-08-05 09:21 GMT   |   Update On 2022-08-05 09:21 GMT
  • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
  • தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

கீழக்கரை

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடந்த

1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது ஷெரிப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பலதுறைகளில் சிறந்து விளங்குவதையும், தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

மேலும் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் ஒரு குறிக்கோளை வகுத்து கொண்டு அதில் வெற்றியடைய வேண்டுமென்ற சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் நாம் எண்ணிய வெற்றியை அடைய முடியும் என்றும் கூறினர். மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்வதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

கீழக்கரைமுஹம்மதுசதக்பொறியியல்கல்லூரியின்

1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் 35 பேர் அவர்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சேக் யூசுப், பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் அப்துல் பாஷித் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News