உள்ளூர் செய்திகள்

அப்துல்கலாம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

Published On 2023-03-06 09:26 GMT   |   Update On 2023-03-06 09:26 GMT
  • அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

பரமக்குடி

பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் சி.பி.எஸ்.சி. பப்ளிக் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார்.

பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், அறிவியல் விஞ்ஞானி இங்கர்சால் செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பரமக்குடி முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கையை முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் வாசித்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா செய்திருந்தார்.

கவுன்சிலர்கள் அப்துல் மாலிக், ஜீவரத்தினம், வாசன் பள்ளியின் தாளாளர் வாசன், புது நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜவேலுச்சாமி, அரசு வழக்கறிஞர் கேசவன், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News