உள்ளூர் செய்திகள்

ஹரிஸ் பாக்கியராஜ்

24 மணி நேரம் சுருள்வாள் சுற்றி பள்ளி மாணவர் சாதனை

Published On 2022-11-29 07:48 GMT   |   Update On 2022-11-29 07:48 GMT
  • ராமநாதபுரம் அருகே 24 மணி நேரம் சுருள்வாள் சுற்றி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
  • நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது. இதில் 24 மணி நேரம், 24 நிமிடம், 24 நொடிகள் சுருள்வாள் சுற்றி மதுரை தனியார் பள்ளியை ேசர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி தேவராஜ் வஸ்தாபி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய சாதனை நிகழ்ச்சியில் மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். அவர் கூறுகையில், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதனை படைத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறேன். எனது முயற்சியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நடுவர் ஹரிஹரன் வழங்கினார். இதில் சிலம்பாட்ட கழக ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி, அந்தோணி பாஸ்டின், பள்ளி தாளாளர் நூருல் அமீன், நிர்வாகிகள் முகம்மது ஆரிப், அண்ணல் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News