உள்ளூர் செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக 11 பேர் போராட்டம்

Published On 2022-10-07 06:51 GMT   |   Update On 2022-10-07 06:51 GMT
  • ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இது தொடர்பாக கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள கழநீர் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவருடன் உறவினர்கள் 11 பேரை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களுக்கு பொது கண்மாயில் குளிக்கவும், குடிநீர் குழாயை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதாம். இதுகுறித்து சிக்கல் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 11 பேரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கலெக்டரிடம் குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News