உள்ளூர் செய்திகள்
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
- சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.
- சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.
அனுபாமா, தானிஸ் இறைவணக்கம் பாடினர். அதில் ரக்ஷா பந்தனுக்குப் பொருள் விளக்கம் கூறினார். முகுந்தன், ஆராதனா குழுவினர் ரக்ஷா பந்தன் பற்றி விளக்கினர்.ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மிருதுளா ஐனனி உறுதிமொழி எடுத்தார்.
பாரத் கல்விக் குழுமத்தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.