உள்ளூர் செய்திகள்
ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்த காட்சி.

சங்கரன்கோவிலில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-12-20 08:13 GMT   |   Update On 2022-12-20 08:13 GMT
  • தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.
  • நகரக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவிலில் சட்டமன்ற அலுவலகத்தின் முன்பு பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே நகரக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பேராசிரியர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், நகர அவைத்தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கேஎஸ்எஸ் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், போக்குவரத்து தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல்நெல்சன், இளைஞர் அணி சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், மாணவர் அணி கார்த்தி, அப்பாஸ்அலி, முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர் சந்திரன், நிர்வாகிகள் வீரா, ஜிந்தா, ஆறுமுகம், மற்றும் தீன்மைதீன், அன்சாரி, ரகுமான், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ், ஜான், வைரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News