உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய போது எடுத்தபடம்.

சங்கரன்கோவிலில் அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

Published On 2023-09-29 08:49 GMT   |   Update On 2023-09-29 08:49 GMT
  • நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது.
  • பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய பைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை தாமதமாக செய்து வருவதால் தங்களுக்கு குடிநீர் முறையாக வர வில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்ததுடன் அதனை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடு ஞ்சாலைத்துறை அதிகாரி களை அழைத்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.

ஆலோசனையின் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி அதிகாரிகள் மீதமுள்ள புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை இரண்டு துறைகளும் சேர்ந்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதமாகி வருகின்றது. இதையும் நெடு ஞ்சா லைத்துறை அதிகாரி களும் கலந்து பேசி அவர்கள் வழி காட்டுத லின்படி உடனடி யாக சரி செய்ய வேண்டும்.

இந்த பணிகளை போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் 20 நாட்க ளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆலோசனையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலக ம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரிய தர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபா நாயகம், நக ராட்சி மேற்பார் வையாளர் கோமதி நாயகம், நெடுஞ்சா லைத்துறை உதவி பொறி யாளர்கள் பல வேசம், முத்து மணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News