உள்ளூர் செய்திகள்

இடி, மின்னலுடன் மழை

Published On 2022-06-20 09:01 GMT   |   Update On 2022-06-20 09:01 GMT
சேலம், ஏற்காட்டில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக சேலத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழை தொடர்ந்து இரவிலும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் சேலத்தில் இரவு முழுவதும் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

சேலம் மாநகரில் அதிக பட்சமாக 15.4 மி.மீ. மழை பெய்துள்ளது . ஏற்காடு 4, ஆத்தூர் 3, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிட தக்கது. 

Tags:    

Similar News