உள்ளூர் செய்திகள்

பள்ளி பகுதியில் தண்ணீர் ேதங்கி நிற்கும் காட்சி. 

திட்டக்குடி பகுதியில் மழை அரசு பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

Published On 2022-07-27 09:00 GMT   |   Update On 2022-07-27 09:00 GMT
  • திட்டக்குடி பகுதியில் மழை அரசு பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
  • காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2தினங்களாக மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சுமாரான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநத்தம், திட்டக்குடி, வாகையூர் ,இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் ,ஆவி னங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடி பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றதால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர். எனவே பள்ளி நிர்வாகம் இனி மழைக்காலம் என்பதால் மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News