உள்ளூர் செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னை:
சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. கடந்த ஞாயிற்றுகிழமை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல், நேற்று முன்தினம்சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்துவருகிறது. பலத்த காற்றுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
எழும்பூர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம், கிண்டி, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.