உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம்

Published On 2023-02-16 09:11 GMT   |   Update On 2023-02-16 09:11 GMT
  • ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது.
  • ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திசையன்விளை:

ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது. வடக்கு ஒன்றியதலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ஆனந்த பாண்டி வரவேற்று பேசினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கட்டளை ஜோதி, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் விவேகானந்தன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் தலா 15 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திசையன்விளைவாரச்சந்தை வளாகத்தில் நவீன முறையில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே அங்கு கடை வைத்து உள்ளவர்களுக்கு தலா ஒரு கடை மட்டும் வழங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News