உள்ளூர் செய்திகள்

மர பட்டறையில் தீவிபத்து

Published On 2023-09-30 12:04 IST   |   Update On 2023-09-30 12:04:00 IST
  • கந்தர்வகோட்டை அருகேமர பட்டறையில் தீவிபத்து
  • ரூ.1.50 லட்சம் பொருள்கள் சேதம்

கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் திருநாவுக்கரசு என்பவர் மர இழைப்பு பட்டறை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பட்டறையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை வந்து பார்த்தபோது பட்டறையில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் பலகைகள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொ டுத்தார். கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். தீ விபத்தினால் பட்டறையில் இருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் மற்றும் மர பலகைகள் எரிந்து நாசமாகின.

Tags:    

Similar News