உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Published On 2023-07-16 12:04 IST   |   Update On 2023-07-16 12:04:00 IST
  • கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் நைனான் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கேசவன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கேசவன் தனது வீட்டின் அருகே உள்ள சுரேஷ் என்பவரது வீட்டின் முன் இருந்த மரத்தில் ஏறி மர கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மர கிளைகள் பட்டது இதில் கேசவன் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது இதைக் கண்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் கேசவனை மீட்டு மலையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கேசவன் இறந்துவிட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேசவன்உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News