உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published On 2023-03-30 06:41 GMT   |   Update On 2023-03-30 07:23 GMT
  • பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த தச்சம்பட்டியைச் சேர்ந்த வர் மலையாண்டி (வயது 47). இவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News