உள்ளூர் செய்திகள்

கிணற்றில் இளம் பெண் பிணம்

Published On 2023-07-20 06:43 GMT   |   Update On 2023-07-20 06:43 GMT
  • விராலிமலை அருகே மாயமான இளம்பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்தது
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விராலிமலை.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுநகரை சேர்ந்தவர் காஜாமைதீன் இவரது மகள் தஜ்லீன்பானு (வயது24). இவர் தாய் தந்தை இறந்த நிலையில் சகோதர்களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், இவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி சகோதரர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த தஜ்லீன்பானு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு கிணற்றில் தஜ்லீன்பானு பிணமாக கிடந்துள்ளார்.உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஜ்லீன் பானுவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News