உள்ளூர் செய்திகள்

போலீசாரிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

Published On 2023-01-10 12:56 IST   |   Update On 2023-01-10 12:56:00 IST
  • ரோந்து சென்ற போது சம்பவம்
  • போலீசாரிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு போலீசார் நேற்று பிலாபுஞ்சை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாக, பாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News