உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-07-09 13:56 IST   |   Update On 2022-07-09 13:56:00 IST
  • வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ஜல்லிக்கட்டு காளையை விற்றதால் விரக்தி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நரேந்திர குமார் (வயது 22). இவர் சம்பவத்தன்று இரவு மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தான் வளர்த்து வந்த ஜல்லிக் கட்டு காளையை அவரது தந்தை விற்பனை செய்த விரக்தியில் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. 

Tags:    

Similar News