உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-06-08 14:26 IST   |   Update On 2022-06-08 14:26:00 IST
  • இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சாலை விபத்தில் பலியானார்.
  • சாலையோரத்தில் இருந்த டெலிபோன் கம்பத்தில் மோதி உயிரிழந்தார்


புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே உள்ள மேக்கினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆனந்த் (வயது 29). இவர் பொன்னமராவதியல் இருந்து தனது சொந்த ஊரான மேக்கினிப்பட்டி செல்வதற்காக டுவிலரில் சென்றுள்ளார்.

மதியாணி விளக்கு ரோடு அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக டெலிபோன் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஆனந்த் இறந்தார்.

இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் உடலை கைப்பற்றி வலையபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News