உள்ளூர் செய்திகள்
- கந்தர்வகோட்டை அண்டனூரில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
- துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில்"குப்பை இல்லா இந்தியா" பிரச்சார இயக்கம் மூலம் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் கிராம இளைஞர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர் இதில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி எழுத்தர் இளவரசன் , வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.