உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மது விற்றவர் கைது
- தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
- தேவா சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
புதுக்கோட்டை :
ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை போலீசார் அனுமதியின்றி வெளி மார்க்கெட்டில் அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி வடதெருவை சேர்ந்த தேவா (வயது 32) என்பது தெரிந்தது. இவர் சட்ட விரோதமாக செம்பட்டி விடுதி மதுபான கடை அருகே அரசு மதுபான பாட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து ஒன்பது மது பாட்டில்கள், ரூ.680 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.