உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம்

Published On 2022-12-30 15:10 IST   |   Update On 2022-12-30 15:10:00 IST
  • கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசியதாவது:-உறுப்பினர்களின் சாலை வசதி, புதிய ஆழ்துளை கிணறு, அங்கன்வாடி மைய கட்டிடம், பள்ளி சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என்று கூறினார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், சுதா, பாரதி பிரியா மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News