உள்ளூர் செய்திகள்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழா

Published On 2023-03-16 11:10 IST   |   Update On 2023-03-16 11:10:00 IST
  • அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
  • பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்

புதுக்கோட்டை

திருவப்பூர்முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. பானக்கம், கஞ்சி , நீர் மோர், பழங்கள் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

Tags:    

Similar News