உள்ளூர் செய்திகள்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா
- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா நடந்தது
- 14 வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14 வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செயல் வீரர்களுக்கான பயிற்சி முகாம் என முப்பெரும் நிகழ்ச்சி நகர செயலாளர் அப்துல்ரஜாக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட செயலாளர் மற்றும் செரியலூர் இனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜியாவுதீன், ஆலங்குடி தொகுதி துணை தலைவர் ஜமால் முகமது, நகர தலைவர் முகமது முகையதீன், கிளை தலைவர் பீர்முகமது மற்றும் கட்சியின் நகர கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.