உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

Published On 2023-11-21 06:46 GMT   |   Update On 2023-11-21 06:46 GMT
  • கறம்பக்குடி அருகே அரசு பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
  • விடுமுறை தினத்தில் நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

கறம்பக்குடி, கறம்பக்குடி அருகே

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 850- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறை களை கொண்ட 2 மாடி கட்டிடம் உள்ளது. தரமற்ற நிலையில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுக ளாகவே பழுத டைந்து ஆங்காங்கே வெ டிப்புகளுடன் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இருந்தது. இருப்பினும் மாணவர்கள் அந்த கட்டிடத்தில் தொ டர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமு றை முடிந்து மாணவர்கள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். அப்போது 9 மற்றும் 10-ம் வகுப்பு அறை கட்டிடத்தில் மேற்கூரை பெயர்ந்து சிமெண்ட் பூச்சுகள் வகுப்ப றைக்குள் சிதறி கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர் . இதை யடுத்து மாணவர்கள் வேறு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை விடு முறை தினத்தில் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் விடுமுறை தினத்தில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெய ர்ந்து விழுந்ததால் அசம்பா விதங்கள் இன்றி மாணவர்கள் உயிர் பிழைத்த னர்.ஆனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழலாம் இதேபோன்று கடந்த ஆண்டும் நவம்பர் மாத காலத்தில் பருவமழையின் போது இந்த பள்ளி கட்டிடம் மேல் கூரை இடிந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் இல்லை. மிகுந்த அச்சத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருகி றோம். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் மற்றும் மாணவர்க ளும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News