உள்ளூர் செய்திகள்
தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து
- கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி குழப்பென்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விவசாயி இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காடு நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலை அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.