உள்ளூர் செய்திகள்

மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் கைது

Published On 2022-11-26 09:14 GMT   |   Update On 2022-11-26 09:14 GMT
  • மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்
  • குடும்ப தகராறில் நடந்த சம்பவம்

புதுக்கோட்டை:

கந்தர்வக்கோட்டையை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் தகராறு ஏற்பட்டதால், லதா கோபித்துக் கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தந்தை சைவராசு(72) வீட்டுக்கு சென்றுவிட்டார். இவர்களது விவகாரத்து வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் மகள்கள் இருவரும் தாயின் பராமரிப்பில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின் லதா, தனது தந்தை சைவராசுவுடன் நீதிமன்றத்தில் இருந்து ஊருக்கு சென்றார். வடுகப்பட்டியில் பேரூந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற கொண்டிருந்த சைவராசுவை, ரவிச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டதில், அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதை த டுக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த முருகேசனையும் ரவிச்சந்திரன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முருகேசன் மருத்துவமைனயில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News