உள்ளூர் செய்திகள்

சிலம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-02 08:25 GMT   |   Update On 2022-09-02 08:25 GMT
  • சிலம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
  • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலம்பாவயல் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறந்தாங்கி தாலுகா சிலம்பாவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 30ம் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக இரண்டுகால யாகபூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்புக்காளை கண்ணன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலம்பு அய்யனார் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News